நீட் தேர்வு: செய்தி
CJP போராட்டத்திற்கு பின்னர் முதல் இடைத்தேர்தல்: பாஜகவுக்கு பின்னடைவு, பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் முன்னிலை
பீஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வினாத்தாள் கசிவு எதிரொலி: NTA தனது வளாக பாதுகாப்பிற்காக ₹7.5 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது
தேசிய தேர்வு முகமை (NTA), ஒரு பாதுகாப்பு நிறுவனத்தை நியமிப்பதற்காக ₹7.5 கோடி மதிப்பிலான டெண்டரைக் கோரியுள்ளது.
'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் குற்றச் செயலாக கருதும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
ஜந்தர் மந்தர் வன்முறை: AI மூலம் அடையாளம் காணப்பட்ட 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கு குற்றப் பின்னணி உள்ளது
காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டத்தின் போது வெடித்த வன்முறை தொடர்பாக குறைந்தது 20 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.
'மாணவர்கள் மீது இனி வழக்கோ கைது நடவடிக்கையோ இல்லை': CJP -மத்திய அரசுடன் எட்டப்பட்ட உடன்பாடு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சி(CJP) தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 'தேர்வு முறைக்கேடு தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா 2026' மீது இன்று காரசார விவாதம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடந்த ஒரு வாரமாகச் செயல்படாமல் முடங்கியிருந்த நாடாளுமன்றத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சியால் அமைதி திரும்பியுள்ளது.
தரவுத்தளம் எவ்வாறு பாதுகாக்கப்படும்? ஆன்லைன் நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (இளங்கலை நீட் தேர்வு) கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகே முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
NTA தேர்வு முறைகேடு சீர்திருத்தம்: நந்தன் நிலேகணி தலைமையில் உருவாகும் 6 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவில் இருப்பவர்கள் யார்?
தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் உயர்நிலைப் பணிக்குழு அமைக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் காவல்துறை வன்முறை விவகாரத்தில் புயலைக் கிளப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள்
வார இறுதி இடைவேளைக்கு பிறகு இன்று மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான டெல்லி காவல்துறையின் தடியடி மற்றும் புதிய முறைகேடு தடுப்புச் சட்ட மசோதா உள்ளிட்ட பல விவகாரங்களால் கடும் அமளி நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டுகள் சிறை! ஜூலை 27ல் நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் சட்டத் திருத்த மசோதா 2026' தாக்கல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து ஐநா செய்தித் தொடர்பாளர் கருத்து
புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) உட்பட பல அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
மாணவர் போராட்டங்களுக்குப் பணிந்தது அரசு! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த தீவிர போராட்டங்களின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! 47 அதிகாரிகளை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது என்டிஏ! குற்றவியல் நடவடிக்கைக்கும் திட்டம்
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளும் போராட்டங்களும் நிலவி வருகின்றன.
மாணவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி! நீட் தேர்வு முறைகேடு குறித்துத் நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட புதிய வீடியோ
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்வி வேண்டும்: அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தல்
நீட் (NEET) மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மருத்துவக் கல்வியை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவர வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும்: மத்திய அரசிடம் கெடு விதித்த CJP
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்திப் போராடி வரும் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP), தனது முதன்மை கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சனிக்கிழமை பிற்பகல் வரை கெடு விதித்துள்ளது.
நீட் போராட்டங்களை குறி வைக்கும் பாகிஸ்தானை தளமாக கொண்ட விஷமிகள்; 480 கணக்குகளை முடக்கிய டெல்லி காவல்துறை
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் குறித்து போலிச் செய்திகளை பரப்பியதாக கூறப்படும் பாகிஸ்தானை சேர்ந்த சுமார் 480 சமூக ஊடகக் கணக்குகளை டெல்லி காவல்துறை முடக்கியுள்ளது.
டெல்லி போராட்ட குழுவினர் மதியம் 12:30 மணிக்கு கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அமைச்சர்களை சந்திக்கின்றனர்
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை அன்று புது டெல்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளது.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் வினீத் ஜோஷி மாற்றம்! புதிய செயலாளராக நரேஷ் பால் கங்வார் நியமனம்
நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக டெல்லி ஜாந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தந்த உறுதிமொழிகள் இவைதான்
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேர்வு துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றதைத் தொடர்ந்து தனது 26 நாள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.
சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நிறைவு: மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் 26 நாள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 26 நாட்களாக மேற்கொண்டு வந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.
மாணவர்கள் போராட்டத்திற்கு இறங்கி வந்த மத்திய அரசு; எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அழைப்பு
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய அளவில் மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் மோதல்: நீட் போராட்டக்காரர்கள் மீதான தடியடி, இணைய சேவை முடக்கம்
டெல்லியின் மத்தியப் பகுதியான கன்னாட் பிளேஸ் மற்றும் ஜந்தர் மந்தர் அருகே நீட் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே புதன்கிழமை இரவு கடுமையான மோதல் வெடித்தது.
'தேர்வுத் தாள் கசிவை அரசியல் ஆக்காதீர்கள்': எதிர்க்கட்சிகளுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம்
NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பாக, அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயலக் கூடாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.
NEET வழக்கு போராட்டம்: உண்ணாவிரதத்தை முடிக்க சோனம் வாங்சுக் அரசுக்கு நிபந்தனை
NEET-UG வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடர்பான மனு குறித்து தலைமை நீதிபதியின் சர்ச்சையான கருத்து
ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியின் தர்ணா போராட்டத்தில், மாணவர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறையில் தலையிடக் கோரும் மனுவை அவசரமாகப் பட்டியலிட இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மறுத்துவிட்டார்.
டெல்லி போராட்ட எதிரொலி: நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிக்கை
நீட் தேர்வில்(NEET) உள்ள முறைகேடுகளை எதிர்ப்பது மட்டுமே தங்கள் நோக்கமல்ல, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் உறுதியான நிலைப்பாடு என்று தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.
"மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தும் ராகுல் காந்தி": பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவு
டெல்லியில் CJP நடத்திய பேரணியின் போது மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்தும், நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தின.
நாடாளுமன்றம் முடங்குவதால் மக்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு: முழு கணக்கு விவரம்
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து இரண்டாவது நாளாக முடங்கியுள்ளன.
பிரதமர் இல்லம் முன் ராகுல் காந்தி தரதரவென இழுத்துச் சென்று கைது; அகிலேஷ் யாதவும் சிறைப்பிடிப்பு
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே நடைபெற்ற தீவிரப் போராட்டத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.
மாணவர்கள் மீதான காவல்துறையின் தாக்குதலை கண்டித்து மோடியின் இல்லத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே, 7 லோக் கல்யாண் மார்க்கில் நடைபெற்று வரும் காங்கிரஸ் போராட்டத்தில், பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ராகுல் காந்தியிடம் பேசினார்.
CJP போராட்டம்: காயமடைந்த போராட்டக்காரர்களை சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் சந்தித்தார்
மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா செவ்வாயன்று டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா (ஆர்.எம்.எல்) மருத்துவமனைக்கு சென்றார்.
"மாணவர்களைத் தூண்டிவிடாதீர்கள்...": நீட் விவகாரத்தில் பிரதமர் மோடி பேச்சு; CJP போராட்டத்திற்கு மத்தியில் NDA எம்பிக்களுக்கு உத்தரவு
டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பினர் நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் தொடரும் பதற்றம்: கொட்டும் மழையில் செல்போன் வெளிச்சத்தில் போராடும் CJP
டெல்லியில் நீட் (NEET) வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டம், 23-வது நாளாக நேற்று நள்ளிரவையும் தாண்டி விடிய விடியத் தீவிரமடைந்துள்ளது.
நீட் 2026 விவகாரம்: ஜே.பி. நட்டாவுடன் CJP நடத்திய பேச்சுவார்த்தையின் 3 முக்கிய கோரிக்கைகள்
நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் Cockroach Janta Party பிரதிநிதிகள், இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து தங்களது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட உருக்கமான கடிதம்: இன்றே உண்ணாவிரதத்தை முடிக்க 3 நிபந்தனைகள்
டெல்லி ஜந்தர் மந்தரில் 21 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை மோசமடைந்ததால் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தற்போது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து ஆதரவாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது: 7 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று பலத்த அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்குகிறது.
நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாராகும் சிஜேபி! டெல்லியில் 163 தடை உத்தரவு அதிரடி அமல்
நாடாளுமன்றத்தின் பருவக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையிலும், காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ள சலோ சன்சத் (நாடாளுமன்றம் நோக்கி செல்வோம்) முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டும், புதுடெல்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (BNSS) பிரிவு 163ன் கீழ் (முன்பு சிஆர்பிசி 144) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
21 வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றம்; டெல்லி போலீஸ் நடவடிக்கை
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை டெல்லி போலீசாரால் அங்கிருந்து அகற்றப்பட்டு வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நீட் யுஜி 2026 மறுதேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன; 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தகுதி
தேசிய தேர்வு முகமை (NTA), தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை), நீட் யுஜி 2026-இன் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: "ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது" என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லி ஜந்தர் மந்தரில் 19 நாட்களாக தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியீடு: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான 2026-2027-ம் கல்வியாண்டு சேர்க்கை தற்பொழுது தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ல் தொடக்கம்: முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
NEET பேப்பர் லீக் எதிர்த்து போராட்டம் செய்யும் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (NEET) உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்தி வரும் போராட்டம், இன்று செவ்வாய்க்கிழமை 11-வது நாளை எட்டியுள்ளது.
ஒரு வார கால தடைக்கு பிறகு டெலிகிராம் இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த கவலைகள் காரணமாக அரசு தற்காலிக தடை விதித்த ஒரு வாரத்திற்கு பிறகு, இந்தியாவில் சில பயனர்களுக்காக டெலிகிராம் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கியுள்ளது.
சட்டசபையில் முதல்வர் விஜய் பதில் உரை: எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து குட்டி ஸ்டோரி
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தனது வழக்கமான பாணியில் ஒரு 'குட்டி ஸ்டோரி' மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
வசூல் ராஜா MBBS பாணியில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 24 பேர் கைது
நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான ஆர்வலர்கள் நீட் (NEET-UG) மறுதேர்வை எழுதினர். முன்னதாக, வினாத்தாள் கசிவு சர்ச்சையை தொடர்ந்து அசல் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த மறுதேர்வு பலத்த பாதுகாப்புகளுடன் நடத்தப்பட்டது.
நாளை நீட் மறுதேர்வு எழுதப் போறீங்களா? அட்மிட் கார்டுடன் இந்த ஒரு ஃபார்ம் இல்லைனா உள்ளே விடமாட்டாங்க! உடனே செக் பண்ணுங்க
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளங்கலை நீட் மறுதேர்வு நாளை (ஜூன் 21) நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
நீட் தேர்வுக்காக டெலிகிராமுக்கு 5 நாட்கள் தடை: மத்திய அரசின் முடிவுக்கு டெல்லி ஹைகோர்ட் க்ரீன் சிக்னல்
ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வின் போது, வினாத்தாள் கசிவு அல்லது முறைகேடுகள் ஏதும் நடப்பதைத் தடுக்கும் நோக்கில், டெலிகிராம் செயலியை 5 நாட்களுக்கு தற்காலிகமாக முடக்க மத்திய அரசு எடுத்த முடிவை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளது.
'புதிய டார்க் வெப்'பாக மாறும் டெலிகிராம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு
மின்னல் வேகத் தகவல் பரிமாற்றத்திற்கு பெயர்போன டெலிகிராம் செயலி, தற்போது குற்றவாளிகள் மற்றும் சைபர் மோசடி கும்பல்களின் புதிய டார்க் வெப்-ஆக மாறி வருவதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
நீட் தேர்வு அதிர்ச்சி! கோவையில் 19 வயது மாணவி தற்கொலை! இரு நாட்களில் 4 மாணவர்கள் உயிரிழந்த சோகம்!
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடையே நிலவி வரும் கடுமையான மனஅழுத்தம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற குளறுபடிகளால், நாடு முழுவதும் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
நீட்-யுஜி 2026 மறுதேர்வு: Telegram தடைக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி 2026 (NEET-UG 2026) மறுதேர்வை ஒட்டி, முறைகேடுகளைத் தடுப்பதற்காக டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்தியாவில் டெலிகிராம் முடக்கப்பட்டாலும் VPN-கள் அதை செயல்படுத்தலாமாம்!
பிரபலமான உடனடிச் செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம், இந்தியாவில் ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றம் சென்ற Telegram; இன்று அவசர விசாரணை
மத்திய அரசால் இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம், மத்திய அரசின் இந்த அதிரடித் தடை உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு பின்னணி: டெலிகிராம் செயலிக்கு தடை, ஆனால் வாட்ஸ்அப் தப்பித்தது எப்படி?
ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, போலி வினாத்தாள்களை விற்பனை செய்யவும், வதந்திகளைப் பரப்பவும் மோசடி செய்பவர்கள் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்துவதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) குற்றம் சாட்டியுள்ளது.
நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு
ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
நீட் மறுதேர்வால் தள்ளிப்போகிறதா தமிழக பொறியியல் கலந்தாய்வு? அமைச்சர் வெளியிட்ட முக்கியத் தகவல்
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை (TNEA 2026) கலந்தாய்வு தேதிகள் திட்டமிட்டபடி தொடங்காமல், சில நாட்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்கக (DOTE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீட்-யுஜி 2026: தேர்வு நேரத்தை நீட்டித்து, கூடுதல் ரஃப் ஒர்க் பேப்பர்களை அறிமுகப்படுத்துகிறது NTA
தேசிய தேர்வு முகமை (NTA), 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை), அல்லது நீட்-யுஜி (NEET-UG) தேர்வில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
5 பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட நிலையில், இந்தியக் கூட்டமைப்புக் கூட்டம் நிறைவடைந்தது
புது டெல்லியில் நடைபெற்ற தனது முதல் முறைசார்ந்த கூட்டத்தில், இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (INDIA) அணி ஐந்து முக்கியப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளது.
NEET- UG மறுதேர்வு: வினாத்தாள் கசிவை தடுக்க வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் ரகசிய அறையில் பூட்டப்பட உள்ளனர்
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள NEET-UG மறுதேர்வின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு கடுமையான நடவடிக்கையாக, தேர்வு வினாத்தாளை அமைத்தல், சரிபார்த்தல் மற்றும் மொழிபெயர்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பணியாளர்களையும் அதிகாரிகள் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை: மறுதேர்வு வினாத்தாள்களை விமானப்படை மூலம் கொண்டு செல்ல மத்திய அரசு திட்டம்
தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, ஜூன் 21 மறுதேர்வு வினாத்தாள்களை அதீத பாதுகாப்புடன் கொண்டு சேர்க்க இந்திய விமானப்படையைப் பயன்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் NTA: நீட்-யுஜி 2026 வினாத்தாள் கசிவு குறித்து விளக்கம்
நீட்-யுஜி 2026 தேர்வில் முழு அளவிலான வினாத்தாள் கசிவு ஏற்பட்டதை தேசிய தேர்வு முகமை (NTA) மறுத்துள்ளது.
மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ்களைப் பெற்ற 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'க்கு பின்னால் இருப்பவர் யார்?
இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அவர்களின் ஒரு கருத்து, 'கரப்பான் பூ ஜனதா கட்சி' (CJP) என்ற ஒரு நையாண்டி அரசியல் கட்சிக்கு வழிவகுத்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு: அடுத்த மாஸ்டர்மைண்ட் பேராசிரியை மனிஷா மந்தாரே கைது! உயிரியல் வினாத்தாள் கசிந்த ரகசியத்தை உடைத்த சிபிஐ
நீட் தேர்வு 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முதன்மை குற்றவாளி பி.வி. குல்கர்னியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், புனே மாடர்ன் கலை, அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியை மனிஷா மந்தாரே டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு: தேசிய தேர்வு முகமை அமைப்பைக் கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில், யுனைடெட் டாக்டர்ஸ் ஃபிரண்ட் (UDF) என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு: 'கிங்பின்' குல்கர்னி கைது; சிபிஐ விசாரணையில் அம்பலமான உண்மைகள்
இளங்கலை நீட் தேர்வு 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ நடத்தி வரும் தீவிர விசாரணையில், பி.வி.குல்கர்னி என்ற வேதியியல் விரிவுரையாளர் இந்த முறைகேட்டின் சூத்திரதாரி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவின் பின்னால் இருக்கும் ராஜஸ்தான் குடும்பம்; 2025 ஆம் ஆண்டுக்கான வினாத்தாளையும் வைத்திருந்தது அம்பலம்
இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) வினாத்தாள் கசிவு சர்ச்சையின் மையத்தில் உள்ள ராஜஸ்தான் குடும்பம், கடந்த ஆண்டுகளிலும் தேர்வு வினாத்தாள்களைக் கசியவிட்டு விற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
'கட்டளைத் தொடரில் மீறல்': நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அரசு பொறுப்பேற்றது
வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து நீட்-யுஜி 2026 தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, "கட்டளைத் தொடரில் ஏற்பட்ட மீறலுக்கு" அரசாங்கம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றது.
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வில் மெகா மாற்றம்! பேப்பர் லீக் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆன்லைன் முறை
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, அடுத்த ஆண்டு முதல் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்படவுள்ளது.
ரத்தான நீட் தேர்விற்கு புதிய தேதி அறிவிப்பு: ஜூன் 21-ல் மறுதேர்வு
மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீட் தேர்வு பேப்பர் லீக் விவகாரத்தில் சிக்கிய மாணவர்; டெலிகிராம் வழியாக கசிந்ததா வினாத்தாள்?
2026-ம் ஆண்டுக்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்த பி.ஏ.எம்.எஸ் (BAMS) மருத்துவ மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.